Wednesday, March 21, 2018

கடல்

பார்த்து பார்த்து ஏக்கம் படர்ந்து
வாடிய பூக்களாய் பார்வை வருந்திட
மின்மினி போல் இமைக்கும் நொடியில்
கடைவிழி பார்வை அவள் வீசிட
மின்னலாய் வந்த விண்மீன் கூட்டம்
அவன் பார்வையில் இடியாய் முழங்கிட
உயிரூட்டிய ஆசை வலைதனை
வீசினான் அவளின் ஆழத்தில் முத்தெடுக்க!

கடல்

-ராகவேந்திரன்

No comments: