Sunday, October 9, 2016

இழப்பு

நா ன் வளர்ந்த நாட்களில் எனது பாட்டன் பாட்டியோடு பழகிய காலம் மிக குறைவு என்று வருந்தியதுன்டு. என் தந்தையின் தகப்பனாரை நான் புகைப்படத்தில் மட்டுமே கண்டுள்ளேன். என் பாட்டி ஞானபூமி வார இதழ் மூலம் எனக்குள் ஆன்மீகத்தை விதைத்தார்,
இதை உணர்ந்திட எனக்கு இத்தனை வருடங்கள் ஆயிற்று.

இன்று வளரும் சிறுவர் சிறுமியர் தாய் தந்தையோடு பழகும் குறுகிய நேரம்  குறித்து பின்னாளில் நிச்சயம் வருந்துவர். பாட்டன் பாட்டி பற்றி சொல்ல அவசியமே இல்லை

இது வெறும் வருத்தம் மட்டுமல்ல, மாபெரும் தலைமுறை இழப்பு

-
உளறல்

No comments: