அவளை நான் சந்தித்ததில்லை
நிழற்படம் மட்டுமே
பல நாட்கள் சென்றன பேசாமல்
வற்புறுத்த விருப்பமில்லை
இன்றவளே விசாரிக்கத் தொடர்பு கொண்டாள் குறுஞ்செய்தியில்
உள்ளுக்குள் ஒருவித மகிழ்ச்சி
அது மகிழ்ச்சிதானா தெரியவில்லை
விசாரித்துக் கொண்டோம்
அவள் குரல் கேட்க ஆசைதான்
கூறிவிட முடியவில்லை
தயக்கங்கள் ஒரு புறமிருக்க
சொல்லிவிட்டேன் அவளை நான்
இழந்திருப்பதை
சில நொடிகள் அமைதி
'ம்ம்ம்' என்றவள் பின் அழைத்தாள்
அது வெறும் குரலல்ல
பெண்மையின் வடிவம்
நான் முழுமையாக நனைந்தேன்
மழை
-ராகவேந்திரன்
No comments:
Post a Comment
Would be very pleased to hear from you as well