Showing posts with label poetry. Show all posts
Showing posts with label poetry. Show all posts

Tuesday, March 19, 2019

இல்லறம்

இல்லறம் ஏன் என்றேன்
அன்றி ஓர் நல்லறம்
அறிந்திலன் எவனும்
உனை வழி செய்ய
உணர்ந்தவன் யான் இன்று!

திருவிளையாடல்

நீயோ உதைக்கிறாய்
கொண்டவளோ சிலிர்க்கிறாள்!

திருவிளையாடல்!

லீலை

கொண்டவளோ சிலிர்க்க
கொடுத்தவனோ கரைய!

லீலை

பசி

எத்தனை புலன்கள்
எல்லாம் அடங்கின

பசி

மலர்க்கொடி

என்னுள் படர்ந்த மலர்க்கொடி நீ
அதன் வாசத்தில் நீந்தும் ஜீவன் நான்

மாயம்

அன்றொருவன் வகுத்திட்டான்
உறவென்றும் நட்பென்றும்
அவன் கணக்கோ உனை விரிக்க
உன் எல்லை நீயல்ல
உள் நோக்கின் எல்லாம் விரியும்
மூடனவன் தன் தசையோடு தனை முடிப்பான்
உறவும் நட்பும் தன் விருந்துக் கணக்கென்பான்

மாயம்

அரசியல்

அறியாதவனாய் நீ நடிக்க
அறிந்தவனாய் அவனும் நடிக்க
எல்லாம் காற்றடைத்த பொய்யடா
குற்றமில்லை குறையுமில்லை
பிறப்பெல்லாம் நடிக்கத்தானே

அரசியல்

குறள்

விழுங்கி விழுங்கியே வாழ்வான் விழுங்கியே
அழிக்கப் படுபவன் அவன்

திருவள்ளுவர் மற்றும் பலர் மன்னிக்க

நகைச்சுவை

உறக்கம் விடுத்து
உணவை குறைத்து
உடலை ஒழித்து
மெருகேற்றினான் தன்னை
போட்டிக்கு, மன்னிக்கவும்
கல்விக்கு

நகைச்சுவை

ஆவலுடன்

மாயை ஒரு கிணறு
நீ மூழ்கி விட்டாய்
நீந்துவதாய் ஒரு மாயை
வெளிவர ஆவலா?
உணர்ந்திடு போதும்

=ஆவலுடன்

Monday, July 23, 2018

மாயமென்ன

நிலவொன்றை நான் கண்டேன்
என் முழுமையும் ஒரு மயக்கம் 
கனா கொண்டேன் கையில் பிடிக்க
நிலவோ என் கனவை கலைக்க
நானும் கடந்தேன் நிழலோடு
அந்த
அழகு நிலவின் நிழலோடு
ஏக்கம் என்னை வழிந்தோட
கிடந்தேன் நானும் கல்லாக
நிழல் மட்டும் என்னோடு

காலம்தான் பறந்து செல்ல
மாயமொன்று நிகழ்ந்ததிங்கே

தென்றல் ஒன்று தீண்டி செல்ல
என் நிலவின் வாசம் கையில் பிடித்தேன்
அந்த தென்றல் தூவிய என் நிலவின் வாசம்
என் முழுமையும் ஒரு மயக்கம்

தென்றலே கொஞ்சம் நெருங்கி வா
என் நிலவிடம் சொல்லிவிடு
அவள் வாசம் மட்டும் போதுமென்று
இது நம் இரகசியம்

மாயமென்ன