அந்த தேனீர் நேரம்
சிவந்த வானில் மஞ்சள் நிலவாக
வரிசையில் அவள்
அவனோ பின் நிற்க
அங்கும் இங்கும் அவள் பார்க்க
அந்த பிழையில்லா இதழ்கள்
பிரம்மன் வடித்த பூவிதழ் அது
அவன் கண்களை துளைத்து
நினைவினை விழுங்க
உயிருற்ற சிலையானான்
வாசம் கண்டவள்
சில்லென்ற தூறல் பட்டவளாய்
தன்னுள்ளே மலர்கின்றாள்!
மயக்கமென்ன?
இரா^2
No comments:
Post a Comment
Would be very pleased to hear from you as well