Saturday, March 24, 2018

மழை

அவளை நான் சந்தித்ததில்லை
நிழற்படம் மட்டுமே
பல நாட்கள் சென்றன பேசாமல்
வற்புறுத்த விருப்பமில்லை
இன்றவளே விசாரிக்கத் தொடர்பு கொண்டாள் குறுஞ்செய்தியில்
உள்ளுக்குள் ஒருவித மகிழ்ச்சி
அது மகிழ்ச்சிதானா தெரியவில்லை
விசாரித்துக் கொண்டோம்
அவள் குரல் கேட்க ஆசைதான்
கூறிவிட முடியவில்லை
தயக்கங்கள் ஒரு புறமிருக்க
சொல்லிவிட்டேன் அவளை நான்
இழந்திருப்பதை
சில நொடிகள் அமைதி
'ம்ம்ம்' என்றவள் பின் அழைத்தாள்
அது வெறும் குரலல்ல
பெண்மையின் வடிவம்
நான் முழுமையாக நனைந்தேன்

மழை

-ராகவேந்திரன்

No comments: