Monday, July 23, 2018

மாயமென்ன

நிலவொன்றை நான் கண்டேன்
என் முழுமையும் ஒரு மயக்கம் 
கனா கொண்டேன் கையில் பிடிக்க
நிலவோ என் கனவை கலைக்க
நானும் கடந்தேன் நிழலோடு
அந்த
அழகு நிலவின் நிழலோடு
ஏக்கம் என்னை வழிந்தோட
கிடந்தேன் நானும் கல்லாக
நிழல் மட்டும் என்னோடு

காலம்தான் பறந்து செல்ல
மாயமொன்று நிகழ்ந்ததிங்கே

தென்றல் ஒன்று தீண்டி செல்ல
என் நிலவின் வாசம் கையில் பிடித்தேன்
அந்த தென்றல் தூவிய என் நிலவின் வாசம்
என் முழுமையும் ஒரு மயக்கம்

தென்றலே கொஞ்சம் நெருங்கி வா
என் நிலவிடம் சொல்லிவிடு
அவள் வாசம் மட்டும் போதுமென்று
இது நம் இரகசியம்

மாயமென்ன

No comments:

Post a Comment

Would be very pleased to hear from you as well